தமிழ்பேசும் மக்களின் கருத்துக்கள் உள்வாங்க வேண்டியது அவசியம்

ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள் 

கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்காக அமைக்கப்பட்ட செயலணிக்குழு, அவர்களது முகாமைத்துவ நடவடிக்கைகளின் போது கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களின் கருத்துக்களை உள்வாங்குவதற்குமான பொறிமுறையொன்றை உருவாக்கவேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் ரீதியிலான பெறுமதிவாய்ந்த இடங்களை அடையாளம் காண்பதற்கும், அவ்வாறு அடையாளம் காணப்பட்ட இடங்களை முகாமைத்துவம் செய்வதற்கு பொருத்தமான நடைமுறையை இனங்கண்டு செயற்படுத்துவதற்கும், சட்டரீதியாக அவ்விடங்களை ஒதுக்குவதற்கு தேவையான செயற்பாடுகளை எடுப்பதற்கும் மற்றும் அவ்விடங்களின் கலாசார பெறுமதிகளை பாதுகாத்து மரபுரிமைகளை மேம்படுத்துவதற்கான சிபாரிசுகளை சமர்ப்பித்தலுக்குமாக ஜனாதிபதியின் ஆணையின் பிரகாரம் அவரின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவினால் ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அண்மையில் வர்த்தமானி மூலம் அறிவித்தலும் விடுக்கப்பட்டிருந்தது.   இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இச்செயலணியின் நடவடிக்கைகளின்போது கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களும் தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டுமென்று ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது தொடர்பாக ஜனாதிபதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடிதமொன்றை எழுதியுள்ளார்.  அக்கடிதத்தில் “கிழக்குமாகாணத்திலுள்ள தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்காக தங்களால் அமைக்கப்பட்ட குழு, அதன் முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, அங்கு வாழும் தமிழ் பேசும் மக்களின் கருத்துக்களையும் உள்வாங்குவதற்குமான ஒரு பொறிமுறையை உருவாக்கவேண்டும்” என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  

கே.அசோக்குமார்

Mon, 06/08/2020 - 08:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை