ஜனாதிபதி கோட்டாபயவுக்கு மும்மணிகளின் ஆசிர்வாதம்

வெற்றிகள் பல கண்ட தலைவர் எனவும் புகழாரம்

எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் ஆடம்பரமும் இன்றி மிகவும் அமைதியாக தனது பிறந்த நாளை இன்றைய தினம் கொண்டாடும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மும்மணிகளின் இறை ஆசி எப்போதும் உள்ளது என பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத்தலைவர்கள் கூட்டாக தமது ஆசிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து யுத்தத்தை வெற்றி கொண்டது முதல் நகரங்களை அபிவிருத்தி செய்து அழகுபடுத்தியவர். இப்போது உலகையே ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டை காப்பாற்றி வழிநடத்திக் கொண்டிருக்கும்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நோயற்ற வாழ்வுடன் பேரும் புகழும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று வாழ்த்துவதாக பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணை இணைப்பாளர்களான அதி. வண. அங்ரஹாறே கஸ்ஸப நாயக தேரர், சிவஸ்ரீ ராமச்சந்திர பாபு சர்மா குருக்கள், அஷ்-ஷெய்க்ஹ் அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹசன் மெளலானா அல்-காதிரி, வண பிதா டாக்டர் எக்ஸ். என். குருகுல சூரிய ஆகியோர் கூட்டாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Sat, 06/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை