ஆறு மாவட்டங்களில் நேற்று மாதிரி தேர்தல்

பொதுத் தேர்தல் ஒத்திகை நேற்று 6 மாவட்டங்களில் நடைபெற்றன.யாழ்ப்பாணம், அம்பாறை, பதுளை, களுத்துறை, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் மாதிரி வாக்களிப்பு இடம்பெற்றது.

கம்பஹா, புத்தளம், மாத்தளை, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் இவை நடைபெற்றது. இன்று (15) முல்லைத்தீவு மாவட்டத்திலும் எதிர்வரும் 20 ஆம் திகதி கொழும்பு மாவட்டத்தில்  தெரிவு செய்யப்பட்ட இருவேறு இடங்களிலிலும் தேர்தல் ஒத்திகை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.எதிர்வரும் 20ஆம் திகதி வரை நாடு முழுவதும் மேலும் 15 வாக்களிப்பு ஒத்திகைகளை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.எதிர்வரும் பொதுத் தேர்தலில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகளை உரிய முறையில் பேணுவதில் காணப்படும் நடைமுறை சிக்கல்கள் தொடர்பில இதன்போது கண்காணிக்கப்படும்.

 

Mon, 06/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை