தேர்தல் பிரசாரத்தை 26 இல் ஆரம்பிக்கிறது இ.தொ.கா

ஜீவன் தொண்டமான் அறிவிப்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது தேர்தல் பிரசாரத்தை இம்மாதம் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் குமாரவேல் தொண்டமான் தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டு சின்னத்தில் நுவரெலியா, பதுளை,கண்டி மாவட்டங்களில்  இ.தொ .கா போட்டியிடுகிறது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் எதிர்வரும் 24ஆம திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் மறைந்து 30ஆவது நாள் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதனை தொடர்ந்து 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது தேர்தல் பிரசார செயற்பாடுகளில் முழுமையாக ஈடுபடும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி,தேசிய தொழிச்சங்கம். அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஒரு தேசியத் தலைவர். எனவே நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முடங்கியிருக்காது. வெளியிலும் தமது பலத்தைக் காங்கிரஸ் காண்பிக்கும். அதற்காகவே இம்முறை பதுளை,கண்டி,நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் நாம் தேர்தலில் களம் இறங்கியுள்ளோம் என்றார்.

 

 

தலவாக்கலை குறூப் நிருபர்

Tue, 06/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை