197 பேருடன் துபாயிலிருந்து விசேட விமானம் வருகை

இலங்கைக்கு வர முடியாமல், துபாயில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் 197 பேர், ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலம் இன்று (07) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை 6.20 மணிக்கு ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 226 எனும் விசேட விமானம், மாணவர்களுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.  

இவ்விமானத்தில் பயணித்த அனைவரும், இலங்கை இராணுவத்தினரால் தொற்றுநீக்கம் செய்யப்பட்டனர்.

அத்தோடு, விமான நிலைய சுகாதார மருத்துவ பிரிவு அதிகாரிகளினாலும், விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகளினாலும், இப்பயணிகளின் உடல் வெப்பநிலை அளவிடப்பட்டது.

இதன் பின்னர் இவர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைளுக்காக இலங்கை இராணுவத்தினரால் அழைத்து செல்லப்பட்டனர். 

Thu, 05/07/2020 - 09:35


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை