கணவனை இழந்த பெண்ணின் குடும்பத்திற்கு இராணுவத்தினரால் வீடு நிர்மாணிக்கப்படவுள்ளது.
கொழும்பு ஆனந்தா கல்லூரி பழைய மாணவர் ஒருவரின் நிதி பங்களிப்பில் இராணுவத்தினரால் இவ் வீடு நிர்மாணிக்கப்படவுள்ளது. சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டவுள்ள வீட்டிற்கான அடிக்கல்லினை யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி ரூவான் வணிகசூரிய நேற்று நாட்டி வைத்தார்.
ஜே/182 உடுவில் தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் பெண் ஒருவர் கணவனை இழந்த நிலையில் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். கிராம சேவையாளர் ஊடாக இந்த குடும்பம் தெரிவு செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் குறூப் நிருபர்
Thu, 05/07/2020 - 09:24
from tkn