கணவனை இழந்த பெண்ணுக்கு இராணுவத்தினரால் வீடு அமைப்பு

கணவனை இழந்த பெண்ணின் குடும்பத்திற்கு இராணுவத்தினரால் வீடு நிர்மாணிக்கப்படவுள்ளது.

கொழும்பு ஆனந்தா கல்லூரி பழைய மாணவர் ஒருவரின் நிதி பங்களிப்பில் இராணுவத்தினரால் இவ் வீடு  நிர்மாணிக்கப்படவுள்ளது. சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டவுள்ள வீட்டிற்கான அடிக்கல்லினை யாழ்.மாவட்ட  கட்டளைத் தளபதி ரூவான் வணிகசூரிய நேற்று நாட்டி வைத்தார்.

ஜே/182 உடுவில் தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் பெண் ஒருவர் கணவனை இழந்த நிலையில் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். கிராம சேவையாளர் ஊடாக இந்த குடும்பம் தெரிவு செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்

Thu, 05/07/2020 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை