வாடகை வாகனங்களில் பயணிகள் இருவரே பயணிக்கலாம்

வாடகைக்கு அமர்த்தப்படும் வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் சாரதியுடன் இரு பயணிகள் மாத்திரமே பயணிக்க முடியும் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.

இது  தொடர்பில்  பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளார்.

பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை சீராக்கும் வகையில் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவதுடன், பொது பயணிகள் போக்குவரத்தின் பாதுகாப்புத் தொடர்பாக கவனத்திற் கொள்ளப்படாத சில சந்தர்ப்பங்களும் உள்ளன. இது தொடர்பில் கவனஞ் செலுத்தப்படுவதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
 

Wed, 04/22/2020 - 10:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை