கூரையை பிரித்து வீட்டுக்குள் இறங்கிய திருடன் மடக்கி பிடிப்பு

வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் வீட்டின் கூரையை பிரித்து வீட்டுக்குள் இறங்கிய திருடனை இளைஞர்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச் சம்பவம் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் உக்குளாங்குளம் சிவன்கோயில் சந்தியில் உள்ள வவுனியா பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சமுர்த்தி அலுவலரின் வீட்டில்  இடம்பெற்றது.

வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக்கொண்டு இருந்தபோது வீட்டு வளவுக்குள் நுழைந்த திருடன்  குறித்த வீட்டில் உள்ள மரம் ஒன்றினூடாக கூரை மேல் ஏறி வீட்டின் கூரையை பிரித்து அதன் வழியாக வீட்டுக்குள் இறங்கியுள்ளான்.

இதனை அவதானித்த குறித்த வீட்டின் உரிமையாளர் கூச்சலிட்டும், தொலைபேசி மூலமாகவும் அப்பகுதி இளைஞர்களை உதவிக்கு அழைத்துள்ளார். விரைந்து செயல்பட்ட இளைஞர்கள் திருடனை மடக்கிப் பிடித்து  மரத்தில் கட்டிவைத்துடன் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

பொலிஸார் திருடனை கைது செய்ததுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா விசேட நிருபர்

Sat, 04/18/2020 - 09:29


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை