ஊரடங்கு உத்தரவை மீறிய நால்வர் கிண்ணியாவில் கைது

ஊரடங்கு உத்தரவை மீறிய நால்வர் கிண்ணியாவில் கைது-Curfew Law Violatiion-4 Arrested-Kinniya

இருவரிடம் கேரள கஞ்சா மீட்பு

திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் இன்று  (15) காலை ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்தின் பேரிலும் , கேரளா கஞ்சா வைத்திருந்த குற்றச் சாட்டின் பேரிலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்னர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்  இருவரிடம் கேரளா கஞ்சாவும் மீட்கப்பட்டடுள்ளது.

இச் சந்தேகநபர்களில் ஒருவரிடமிருந்து, 200 மில்லி கிராம், மற்றொருவரிடமிருந்து 300 மில்லி கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சந்தேக நபர்களை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

(திருமலை மாவட்ட விசேட நிருபர் - ஏ.எம்.ஏ. பரீத்)

Wed, 04/15/2020 - 11:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை