மழையால் சென்ஜோன் டிலரி தோட்டத்தில் 126 பேர் பாதிப்பு

நோர்வூட், சென்ஜோன் டிலரி தோட்ட பகுதியில் பெய்த மழை காரணமாக 27 குடும்பங்களைச் சேர்ந்த 126 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் முழுமையாக பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களைச் சேர்ந்த 26 பேர் தற்காலிகமாக அப்பகுதியில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (14)  மாலை அப்பகுதியில் பெய்த கடும் மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக குறித்த பகுதியில் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள குடியிருப்புகளின் கூரைகள் காற்றில் அள்ளுண்டு போயுள்ளதாகவும் குடியிருப்புகளில் இருந்த பொருட்கள் சில சேதமாகியுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகளை கிராம அதிகாரி செய்து வருவதோடு, மாற்று நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

(ஹற்றன் சுழற்சி நிருபர்)         

Wed, 04/15/2020 - 11:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை