கைகலப்பில் ஒருவர் கொலை; சந்தேகநபர் கைது

வெள்ளவத்தை, சுவர்ணா வீதியில் இடம்பெற்றுள்ள கொலைச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு (17) இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கூரிய ஆயுதமொன்றினால்  தாக்குதலுக்கு உள்ளான நபர், களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

அதேயிடத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Sat, 04/18/2020 - 10:29


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை