ஹட்டன், கினிகத்தேனையில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த மூவர் கலால் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹட்டன், கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே மேற்படி சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், பத்தனையில் கசிப்பு காய்ச்சிவதற்கான 40 லீற்றர் கோடாவுடன் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்படி கினிகத்தேனை ரஞ்சுராவ பகுதியில் 940 மில்லிகிராம் ஹெரோயினை வைத்திருந்த மூவரும், பத்தனை பொரஸ்கிறிக் தோட்டப் பகுதியில் 40 லீற்றர் கோடாவுடன் ஒருவருமான நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைக்காக முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
அதேவேளை, சட்டவிரோதமாக மதுபான உற்பத்தியில் ஈடுபடும், விற்பனை செய்யும் நபர்களை கைதுசெய்வதற்கான தீவிர நடவடிக்கையில் கலால் திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.
ஹட்டன் சுழற்சி நிருபர்
from tkn