கொவிட் 19 வைரஸினாலேற்பட்ட அசாதாரண நிலையை கருத்திற்கொண்டு அரசாங்கத்தினால் வழங்கப்படும் ரூபா 5,000 கொடுப்பனவுகளை பெற கந்தளாய் பிரதேச செயலகப் பிரிவில் 12,009 பேர் தகுதி பெற்றுள்ளதாக, கந்தளாய் பிரதேச செயலாளர் உபேக்ஷா குமாரி தெரிவித்தார்.
இவர்களுக்காக 6 கோடி 45 ஆயிரம் (60,045,000) ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நேற்று (12) வரை 9,263 பயனாளிகளுக்கு 4 கோடி 63 இலட்சத்து 15 ஆயிரம் (46,315,000) ரூபா வழங்கிவைக்கப்பட்டுள்ளது. அதன்படி முதியோர் கொடுப்பனவு பெறும் 983 பேருள் 909 பேரிற்கு 45 இலட்சத்து 45 ஆயிரம் (4,545,000) ரூபாவும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள 422 முதியோர்களுள் 344 பேருக்கு 17 இலட்சத்து 20 ஆயிரம் (1,720,000) ரூபாவும் சிறுநீரக நோய் கொடுப்பனவு பெறும் 96 பேருள் 83 பேரிற்கு 4 இலட்சத்து 15 ஆயிரம் (415,000) ரூபாவும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள சிறுநீரக நோயாளிகள் 25பேருள் 20 பேரிற்கு ஒரு இலட்சம் (100,000)0 ரூபாவும் விசேட தேவையுடையோர் கொடுப்பனவு பெறும் 133 பேருள் 121 பேரிற்கு 6 இலட்சத்து 5 ஆயிரம் (605,000) ரூபாவும் விசேட தேவையுடையோர் காத்திருப்போர் பட்டியலில் உள்ள 90 பேருள் 83 பேரிற்கு 4 இலட்சத்து 15 ஆயிரம் (415,000) ரூபாவும் சமுர்த்தி கொடுப்பனவு பெறும் 4744 பேருள் 4,640 பேரிற்கு 2 கோடியே 32 இலட்சம் (23,200,000) ரூபாவும் சமுர்த்தி காத்திருப்போர் பட்டியலில் உள்ள 5,516 பேருள் 3,063 பேரிற்கு ஒரு கோடியே 53 இலட்சத்து 15 ஆயிரம் (15,315,000) ரூபாவும் வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.
(ஹஸ்பர் ஏ ஹலீம்)
from tkn