அல் ஹாசிமி சங்கத்தின் கிரிக்கெட் போட்டி

5வது தடவையாகவும் அல் ஹாசிமி சங்கத்தினால் அணிக்கு 6 பேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியொன்று கொழும்பு நாரஹன்பிட்டி சாலிஹா மைதானத்தில் சங்கத்தின் தலைவர் ஸெய்யத் றிஸ்வி மௌலானா தலைமையில் இடம் பெற்றது.இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக லயன்ஸ் கழகத்தின் முன்னாள் சர்வதேச ஆளுநர் எஸ்.எம்.றஸ்லான் மௌலானா கலந்து கொண்டிருந்தார். கௌரவ அதிதிகளாக நகீப் மௌலானா, நஜீப் மௌலானா உள்ளிட்ட சங்கத்தின் பல உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

சங்கத்தின் விளையாட்டுக் குழுவின் தலைவர் ஸெய்யத் பஸ்மி மௌலானாவின் வழி நடாத்தலில் 5 ஓவர் கொண்ட போட்டியில் பல கழகங்கள் கலந்து கொண்டன. இப்போட்டியில் வெலிகம விளையாட்டுக் கழகங்களான றிவர் சயிட் ஏ கழகமும், யங் புலூ ஏ கழகமும் இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டு யங் புலூ கழகம் வெற்றி பெற்று வெற்றிக் கேடயத்தை சுவீகரித்துக் கொண்டது.

வெற்றி பெற்ற கழகங்களுக்கான வெற்றிக் கேடயங்களை அதிதிகள் வழங்கி வைத்தனர். இதன்போது சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் ஏனைய போட்டிகள் நடாத்தப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எஸ்.எம்.ஜாவித்

Tue, 03/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை