முல்லைத்தீவில் மரக்கடத்தல் முறியடிப்பு

முல்லைத்தீவு உடையார்கட்டு நஞ்சுண்டான்குள காட்டுப் பகுதியில் பாரிய மரக் கடத்தல் ஒன்று வனவளத் திணைக்களத்தினரால் முறியடிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மரங்களை கடத்தி உழவு இயந்திரத்தில் கொண்டு செல்ல முற்பட்ட போது வனவள திணைக்கள அதிகாரிகள் சுற்றிவளைத்து அவர்களை கைது செய்தனர்.

எனினும் இதன்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மூவர் தப்பியோடியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் ஆறு இலட்சம் ரூபா பெறுமதியிலான முதிரை மரதுண்டங்கள் ,பலகைகள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட உழவியந்திரம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன . மிக நீண்டநாட்களாக வனப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த சட்டவிரோத மரக் கடத்தல் தொடர்சியாக முல்லைத்தீவு வட்டார வன திணைக்களத்தினரால் அவதானிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு விசேட நிருபர்

Tue, 03/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை