அமைதிப்படையின் கரப்பந்து விளையாட்டு போட்டி

ஹம்பாந்தோட்டை நகரத்தில் சுமார் 06 வருட காலங்களாக இயங்கிவரும் '“PEACE FORCE - அமைதிப்படை'கணனி பயிற்சி நிலையத்தின் ஆண்டுவிழாவை முன்னிட்டு ஏற்பாடுசெய்த கரப்பந்து விளையாட்டு போட்டி பயிற்சி நிலை மைதானத்தில் 08 ஆம்திகதி இடம்பெற்றது. இப்போட்டியில் சுமார் 15க்கு மேற்பட்ட அணிகள் பங்குபற்றின.

இறுதி சுற்றில் வெற்றியீட்டிய அணிகளுக்கு பணப்பரிசில்களும் வெற்றிக் கிண்ணங்களும் மற்றும் சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டன.

இப்போட்டி நிகழ்ச்சியின் விஷேட அதிதிகளாக அமைதிப்படையின் “PEACE FORCE ஸ்தாபகத் தலைவரும் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தின் பிரபல சட்டத்தரணியும் மற்றும் முன்னால் ஈரானிய நாட்டிற்கான இலங்கை தூதுவருமான பைஸால் ரஷீன் மற்றும் சட்டத்தரணி சேரா ரஷீன் ஆகியோருடன் மேலும் பலரும் கலந்துசிறப்பித்தனர்.

ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்

Wed, 03/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை