அவுஸ்திரேலியாவில் ஒரு இடத்தில் இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று (30) இரவு முதல் இந்நடைமுறை அமுலாகுவதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
New South Wales மற்றும் விக்டோரியா பகுதிகளில் இந்நடைமுறையை மீறும் வகையில் செயற்படுவோருக்கு எதிராக அபராதம் விதிக்கப்படும் எனவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ தேவைக்காகவும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய மாத்திரமே பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியும் எனவும் அந்நாட்டு பிரதமர் ஸ்கொட் மொரிஸன் தெரிவித்துள்ளார்.
Mon, 03/30/2020 - 11:57
from tkn