கிளிநொச்சியில் இராணுவ சோதனைச் சாவடிகள்

ஊரடங்குச் சட்டம் கடுமையாக்கப்பட்டதனை தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்திலும் ஏ-9 பிரதான வீதி உள்ளிட்ட மாவட்டத்தின் பிரதான இணைப்பு வீதிகள் எங்கும் இராணுவம் சோதனைச் சாவடிக்களை அமைத்து பொது மக்களின் தேவையற்ற நடமாட்டத்தை கட்டுப்படுத்தி வருகின்றது.

சுகாதார பணியாளர்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக அனுமதிக்கப்பட்டவர்கள், விவசாயிகள் போன்றவர்கள் தவிர்ந்த ஏனையவர்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதோடு அவர்கள் அந்தந்த சோதனை சாவடிகளிலிருந்து திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

கிளிநொச்சி குறூப் நிருபர்

Mon, 03/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை