தேர்தல் கண்காணிப்பு: 6000 பேரை ஈடுபடுத்த பெப்ரல் அமைப்பு முடிவு

பொதுத்தேர்தலில் உள்நாட்டு மற்றும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 6000 கண்காணிப்பாளர்களை கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தவுள்ளதாக பெப்ரல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது

சர்வதேச நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் 40 பேர் இலங்கை வர உள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

வேட்புமனு கையளிக்கும் நாள் தொடக்கம் கண்காணிப்பு செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆசிய தேர்தல் கண்காணிப்பு நிலையத்தை சேர்ந்தவர்களும் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். வேட்புமனுக்கள் 12 ஆம் திகதி முதல் ஏற்கப்பட்டன உள்ளன.

 

Mon, 03/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை