4 மாவட்டங்களில் சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டி

நுவரெலியா, களுத்துறை,யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்டங்களில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி 'கை' சின்னத்தில் தனித்து போட்டியிடுமென கட்சி செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சி சார்பில் யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி அங்கஜன் இராமநாதன் யாழ் மாவட்டத்துக்கான சுதந்திரக் கட்சியின் முதன்மை வேட்பாளராக போட்டியிடவுள்ளார். யாழ் மாவட்டத்துக்கான உயிரிழந்துள்ளதாக நிமந்த என்பவர் பொய்ப்பிரசாரம் செய்திருந்தார். இவர் நேற்று அதிகாலை பண்டாரகமயில் கைதானார். துஷ்மந்த என்பவர் ராகமவில் வைத்து சி.ஐ.டியினால் கைது செய்யப்பட்டார். இவர்களில் ஒருவர் சலூன் ஒன்றில் பணியாற்றுவதோடு மற்றவர் ஆட்டோ ஓட்டுபவராவார்.இவர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் விளக்கமறியிலில் வைக்கப்படவுள்ளனர்.

கொரோனா தடுப்பு செயற்பாடுகளை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு செயற்பட்ட 21 பேர் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 40 பேர் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு பொய்ப்பிரசாரம் செய்வோருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும் என்றும் அவர் கூறினார்.

Tue, 03/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை