வென்னப்புவ, கம்மலவெல்ல கடலில் நீராடிய பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்றையதினம் (10) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று பிற்பகல் 4.30 மணியளவில், கடலில் நீராடிக் கொண்டிருந்த மாகந்துர, சந்தலங்கா பிரதேசத்திலிருந்து சுற்றுலா வந்த குழுவினரில், மூவர் அலையில் சிக்குண்டு காணாமல் போயுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மேற்கொண்ட தேடுதலில் குறித்த பெண்ணினதும் மற்றுமொருவரினதும் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மற்றைய நபரை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
சடலங்கள் தங்கொட்டுவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Sun, 01/12/2020 - 07:25
from tkn