பிரபல சிங்கள நடிகரும், விரிவுரையாளருமான ஜயலத் மனோரத்ன காலமானார்.
1948ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் திகதி பிறந்த அவருக்கு மரணிக்கும்போது 71 வயது ஆகும்.
சுகவீனமுற்றிருந்த அவர், இன்று (12) அதிகாலை பொரலஸ்கமுவவிலுள்ள தனது வீட்டில் வைத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சினிமா, மேடை நாடகம், தொலைக்காட்சி நாடகங்களில் நடித்து வந்த அவர், நகைச்சுவை கதாபாத்திங்கள் உள்ளிட்ட பல்வேறு குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்துள்ளதோடு, ஜனாதிபதி விருது, அரச சாகித்திய விருது, நாடக விருதுகள் உள்ளிட்ட பல்வேறு அரச விருதுகளை பெற்றுள்ளார்.
இலங்கை ரூபவாஹினியில் நீண்ட காலமாக ஒளிபரப்பப்பட்டு வந்த, மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த கம்பெரலிய, நேதேயோ, தூதருவோ உள்ளிட்ட பல தொலைக்காட்சி நாடகங்களில் அவர் சிறந்த பாத்திரமேற்று நடித்திருந்தார்.
அவரது இறுதிக் கிரியைகள் எதிர்வரும் புதன்கிழமை (15) மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
from tkn