வத்தளை, களனி, பியகம பகுதிகளில் 24 மணித்தியால நீர் வெட்டு

வத்தளை, களனி மற்றும் பியகம ஆகிய பகுதிகளில் எதிர்வரும் 13ஆம் திகதி 24 மணித்தியால நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை (13) காலை 8.00 மணியிலிருந்து நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பேலியகொடை, வத்தளை – மாபொல நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

களனி பிரதேச சபைக்கு உட்பட்ட ஹெந்தல, எலக்கந்த மற்றும் பள்ளியவத்தை ஆகிய பகுதிகளிலும் நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

பியகம பிரதேச சபைக்கு உட்பட்ட மகுருவில வீதி, விஜேராம மாவத்தை, கே.ஈ. பெரேரா மாவத்தை, கோணவல, பமுணுவில மற்றும் பதலஹெனவத்த ஆகிய பகுதிகளிலும் நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Sat, 01/11/2020 - 14:13


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை