மன்னார்-யாழ்ப்பாணம் 'சுதந்திர தின சமாதான துவிச்சக்கர வண்டி' பயணம் ஆரம்பம்

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் பருத்தித்துறையை நோக்கி 'சுதந்திர தின சமாதான துவிச்சக்கர வண்டி' பயணத்தை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் நேற்று காலை 8.15 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைத்து வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த ஜீ.எச்.பீரிஸ் என்பவர் கடந்த 28 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பித்த 'சுதந்திர தின சமாதான துவிச்சக்கர வண்டி பயணம்' நேற்று முன்தினம் மாலை மன்னாரை வந்தடைந்தது.

இந்த நிலையிலே மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான குறித்த துவிச்சக்கர வண்டி பயணத்தை மாவட்ட அரசாங்க அதிபர் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். ஆரம்ப நிகழ்வில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்,மன்னார் பிரதேசச் செயலாளர்,வீதி போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் அதிகாரி உட்பட பலர் கலந்து கொண்டு துவிச்சக்கர வண்டி பயணத்தை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர்.

மன்னாரில் இருந்து ஆரம்பமான குறித்த துவிச்சக்கர வண்டி பயணம் யாழ்ப்பாணம் பருத்தித்துறைக்குச் சென்று அங்கிருந்து

முல்லைத்தீவு,திருகோணமலை சென்று அங்கிருந்து மீண்டும் கொழும்பை நேக்கி பயணிக்கவுள்ளார்.

மன்னார் குறூப் நிருபர்

Fri, 01/31/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை