முப்படையின் அமைதி பேணும் பணி தொடர்ந்து நீடிப்பு

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், ஆயுதம் தாங்கிய படையினரை (முப்படை)  தொடர்ந்து பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்துவது தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ விடுத்துள்ள குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது அமைதியை பேணும் பொருட்டு குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, யாழ்ப்பாணம் வவுனியா, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை உள்ளிட்ட நாட்டிலுள்ள 25 நிர்வாக மாவட்டங்களின் பாதுகாப்புக்காக,முப்படை வீரர்களை பணியில் அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Wed, 01/22/2020 - 11:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை