“தோனி அடுத்த ஆண்டும் சென்னை அணிக்காக விளையாடுவார். இதில் ரசிகர்களுக்கு எவ்வித சந்தேகமும் வேண்டாம்” என சென்னை அணி உரிமையாளர் சீனிவாசன் தெரிவித்தார்.
அண்மையில் இந்திய கிரிக்கெட் சபை (பி.சி.சி.ஐ) சார்பில் வெளியிடப்பட்ட சம்பள ஒப்பந்தப் பட்டியலில் தோனி பெயர் நீக்கப்பட்டது. இன்னும் சில மாதங்களில் ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்காக களமிறங்க அவர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 2008 முதல் சென்னை அணியை வழிநடத்தும் தோனி மூன்று முறை கிண்ணத்தை வென்று தந்துள்ளார். பி.சி.சி.ஐ முன்னாள் தலைவர் மற்றும் சென்னை அணி உரிமையாளர் சீனிவாசன் கூறுகையில், “தோனி எப்போது வரை விளையாடுவார் என பல ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். இந்த ஆண்டு முழுவதும் அவர் விளையாடுவார் என உறுதி அளிக்கிறேன். அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஐ.பி.எல் ஏலத்தில் தோனி பெயர் இடம்பெற்றாலும், சென்னை அணிக்காக தக்கவைக்கப்படுவார். இதில் ரசிகர்களுக்கு எவ்வித சந்தேகமும் வேண்டாம்” என்றார்.
from tkn