தேசிய மட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம்

திருகோணமலை மாவட்டத்தில் தி/மூதூர்/அஷ்ரப் வித்தியாலயம் தேசிய மட்ட சிறுவர் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்து மூதூர் மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இப் போட்டி கடந்த (20) நாவலப்பிட்டி ஜயதிலக்க விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது

இப்போட்டியில் வெண்கலப் பதக்கத்தைப் பெற்ற மாணவர்களுடன் அதிபர் எம்.எச்.எம்.றியால்,விளையாட்டு பொறுப்பாசிரியர், எஸ்.எச்.தமீம், எம்.எச்.சைபுதீன்,எம்.ஐ.ரபீக் ஆகியோர் காணப்படுகின்றனர்.

இப்போட்டியில் வழிகாட்டிய மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஹாசீம் மற்றும் வலய அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

திருமலை மாவட்ட விசேட, மூதூர் தினகரன் நிருபர்கள்

Fri, 01/31/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை