கென்ய இராணுவத் தளத்தில் அல் ஷபாப் குழு தாக்குதல்

கென்ய கடற்கரை பிராந்தியமான லூமாவில் கென்யா மற்றும் அமெரிக்க படையினர் பயன்படுத்தும் கடற்படைத் தளம் ஒன்றின் மீது இஸ்லாமிய போராட்டக் குழுவான அல் ஷாபாப் தாக்குதல் நடத்தியுள்ளது.

சிம்பா என்ற இந்த முகாமில் இருந்து நேற்று அதிகாலை தொடக்கம் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்பதாகவும் புகை வெளிவருவதாகவும் அங்குள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தத் தளத்தில் இருந்து தாக்குதல்தாரிகளை துரத்தியதாக கென்ய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

அல் கொய்தா அமைப்புடன் தொடர்புடைய அல் சபாப்பின் தலைமையகம் அண்டை நாடான சோமாலியாவில் உள்ளது. ஓர் தசாப்தத்திற்கு முன்னர் இந்த அமைப்பு நிறுவப்பட்டது தொடக்கம் பிராந்தியத்தில் பல தாக்குதல்களையும் நடத்தியுள்ளது.

சோமாலிய தலைநகர் மொகடிசுவில் கடந்த டிசம்பர் 28 ஆம் திகதி நடத்திய குண்டு தாக்குதல் ஒன்றில் சுமார் 80 பேர் கொல்லப்பட்டனர்.

Mon, 01/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை