சந்தேகநபர் விமான நிலையத்தில் பணிபுரியும் சுமை தூக்குபவர்
ரூபா 5.8 கோடி (ரூ. 58 மில்லியன்) பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் கட்டுநாயக்க விமானநிலையத்தில் பணிபுரியும் சுமை தூக்குபவர் (Porter) கைது செய்யப்பட்டுள்ளார்.
41 வயதான குறித்த சந்தேகநபர் தனது உடலில் மறைத்து வைத்த நிலையில், 100 கிராம் நிறை கொண்ட 65 தங்க பிஸ்கட்டுகளையும் விமானநிலையத்திலிருந்து சட்டவிரோதமாக கடத்துவதற்கு முயற்சித்துள்ளார்.
இதன்போது, கட்டுநாயக்க சுங்கத் திணைக்களத்தின் போதைத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, சுங்கத் திணைக்களத்தின் பதில் பேச்சாளரும், சுங்க அத்தியட்சகருமான லால் வீரகோன் தெரிவித்தார்.
குறித்த தங்க பிஸ்கட்டுகளின் மொத்த நிறை 6.5 கிலோகிராம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சுங்கத் திணைக்களத்தின் புலனாய்வு அதிகாரிளால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்கத் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
from tkn