சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் கௌரவிப்பு

சர்வதேச குத்துச்சண்டை போட்டிக்கு செல்லும் பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியின் வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு (08) கல்லூரியின் அதிபர் பொ.சிவநாதன் தலைமையில் நடைபெற்றது. 

வடமாகாணம் ஏழாம் அறிவு தற்காப்பு கலை சங்கத்தின் வீரர்களான, எஸ்.சஞ்சயன், ரி.நாகராஜா மற்றும் கெ.ராகுல் ஆகியோர் பாடசாலை சமூகத்தால் கௌரவிக்கப்பட்டிருந்தனர். 

'பிரன்ஞ் சவாட் கிக் பொக்சிங்' அமைப்பின் அனுசரணையுடனும், கல்வி அமைச்சின் அனுமதியுடனும் எதிர்வரும் 21ம் திகதி பாகிஸ்தான் லாகூர் கடாபி விளையாட்டு மைதான உள்ளக அரங்கில் நடைபெறவுள்ள கிக் பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொள்ளவுள்ள குறிப்பிட்ட மாணவர்களுக்கு கௌரவம் வழங்கப்பட்டது.

இந்த மாணவர்கள் தேசிய மட்டத்தில் பல போட்டிகளில் பங்கு கொண்டு வடக்கு மாகாணத்திற்கும், தாங்கள் கல்வி கற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.இந்நிகழ்வில் வடமாகாண கிக் பொக்சிங் பயிற்றுவிப்பாளர் எஸ்.நந்தகுமார், கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியை திருமதி சாந்தினி மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.   

கோவில்குளம் குறூப் நிருபர்  

Fri, 01/10/2020 - 10:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை