இந்தியாவுடனான 3ஆவது 20க்கு 20போட்டி இன்று

இசுரு உதான விலகல்

இந்தியாவுக்கு எதிராக இன்று (10) நடைபெறவுள்ள 3ஆவதும், இறுதியுமான ரி 20தொடரிலிருந்து இலங்கை அணியின் சகலதுறை வீரரான இசுரு உதான விலகுவதாக அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.  

இந்தியா விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3போட்டிகள் கொண்ட ரி 20தொடரில் விளையாடி வருகிறது. குவாத்தியில் நடைபெறவிருந்த முதலாவது போட்டி ஆடுகளத்தின் ஈரத்தன்மை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்த நிலையில் இந்தியா–இலங்கை இடையிலான 2ஆவது ரி 20போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் (07) நடைபெற்றது. 

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 9விக்கெட் இழப்புக்கு 142ஓட்டங்களை எடுத்தது. 143ஓட்டங்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 15பந்துகள் மீதம் இருக்கையில் 7விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 

இலங்கை அணி களத்தடுப்பில் ஈடுபட்ட போது இசுரு உதானவின் முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து உடனடியாக உடைமாற்றும் அறைக்கு திரும்பிய அவர், மீண்டும் களமிறங்கவில்லை. 

இலங்கை அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறுகையில், ”இசுரு உதான அதிக வலியுடன் காணப்பட்டார்.

அவருக்குத் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, இந்தியா அணியுடனான 3ஆவது போட்டியில் இசுரு உதான விளையாட மாட்டார்” என தெரிவிக்க்பபட்டுள்ளது.  

காயம் குணமடையும் பட்சத்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தொடரில் அவர் விளையாடுவார் என மிக்கி ஆர்தர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

2ஆவது போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இசுரு உதான தொடர்பில் பேசிய லசித் மாலிங்க, அவர் எமது பிரதான பந்துவீச்சாளர் ஆவார். இந்த வடிவத்தில் மிகவும் அனுபவமிக்க வீர்ர்களில் ஒருவராக உள்ளார். ஆனால், அவர் பந்துவீச முன் உபாதைக்குள்ளாகியது கவலையளிக்கிறது என தெரிவித்தார்.   

Fri, 01/10/2020 - 10:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை