இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவரும், மூத்த தொழிற்சங்க உறுப்பினருமான அம்மாவாசை ராமையா நேற்று காலமானார்.
அன்னராது பூதவுடல் எதிர்வரும் 15.12.2019 மாலை 03.00 மணிக்கு சந்திரிகாம தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. ஈமக்கிரியைகளில் இ.தொ.கா தலைவரும், தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட சகல இ.தொ.கா உயர்பீட அங்கத்தவர்களும், பிரதேசசபை, நகரசபை ஆகியவற்றின் தலைவர்களும், அங்கத்தவர்களும், இ.தொ.கா உத்தியோகஸ்தர்களும் மாவட்டத் தலைவர், தலைவிகள் அனைவரும் இதில் பங்கேற்கவுள்ளனர்.
Sat, 12/14/2019 - 06:00
from tkn