சு.க.நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும்

ஜனாதிபதியின்  வேலைத்திட்டங்களுக்கு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எதிர்கால வேலைத்திட்டங்களுக்கு நிபந்தனைகளற்ற ஆதரவை சுதந்திரக் கட்சி வழங்கும் என்பதுடன், ஆசியாவின் முன்னுதாரணமான தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாறிவருவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை வீரக்கெட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு  உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வேலைத்திட்டங்கள் அவரை ஆசியாவில் முன்னுதாரணமான தலைவராக மாற்றிவருகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எதிர்கால வேலைத்திட்டங்களுக்கு நிபந்தனைகளற்ற ஆதரவை சுதந்திரக் கட்சி வழங்கும்.

ஜனாதிபதிக்கு வாக்களிக்காத மக்கள்கூட அவரை பாராட்டுகின்றனர். ஜனாதிபதி ஒருவருக்குரிய அவரப்பிரசாதங்களை அவர் துண்டிப்பதால் இதுவரை இருந்த ஜனாதிபதிகளுக்கு இல்லாத பிரபல்யம் அவருக்கு கிடைத்து வருகிறது.

மக்களின் துன்பங்களை அறிந்துகொண்டு அதற்கான தீர்வையே அவர் வழங்கிவருகிறார். தேசிய பொருளாதாரத்துக்கு எதிர்காலத்தில் இந்த நாட்டில் உற்பத்தி செய்யக் கூடிய அனைத்துப் பொருட்களையும் உற்பத்தி செய்வதுடன், ஏற்றுமதிகளும் வரையறுக்கப்படும் என்றார்.

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Mon, 12/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை