மட்டக்களப்பு கிரான்குளத்தில் பாரிய விபத்து; ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளத்தில் சனிக்கிழமை மாலை (21) ஏற்பட்ட வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கல்முனைப் பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர் மீது அதே திசையில் (கல்முனைப் பகுதியிலீருந்து) மட்டக்களப்பு நோக்கிப்  பயணித்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிளை கொழுவிக்கொண்டு இழுத்துச் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் மோட்டார் சைக்கிளை பேருந்து இழுத்துச் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் தீப்பற்றியுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞன் கடுக்காமுனைக் கிராமத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி போக்குவரத்துப் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

(பெரியபோரதீவு தினகரன் நிருபர்)

Mon, 12/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை