அரசு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற ஆதரவு வழங்குவோம்

19 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்க ஆதரவளியோம்

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு ஆதரவளிக்க மாட்டோமென பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவின் பெயர் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நேற்றுமுன்தினம் முதல் முறையாக அவர் மக்கள் சந்திப்புகளில் ஈடுபட்டிருந்தார்.

கொலன்னாவையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய பின்னர் கோட்டையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் கருத்து வெளியிட்ட அவர், 

அமெரிக்காவுடனான மில்லேனியம் செலேன்ஜ் கோப்பரேஷன் உடன்படிக்கையை கைச்சாத்திடமாட்டோமென்றே தற்போதைய ஆட்சியாளர்கள் தேர்தல் காலத்தில் உறுதிமொழிகளை வழங்கினர். ஒப்பந்தத்தை இல்லாது செய்ய பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கத் தயாராக உள்ளோம். ஜனாதிபதித் தேர்தலின் அரசாங்கம் அளித்த உறுதிமொழியை காப்பாற்ற வேண்டும். அரசாங்கத்தின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவு வழங்க தயாராகவுள்ளோம். 

எதிர்க்கட்சியை ஒரு முற்போக்கான சக்தியாக வழிநடத்தவே விரும்புகிறேன். அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை இரத்துச் செய்ய மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுக்கொள்ள அரசாங்கம் விரும்புகிறது. ஆனால், அதற்கு நாம் ஆதரவளிக்க தயாராகவில்லை. இந் நடைமுறையை விடுத்து இந்த அரசாங்கம் தேர்தலின்போது வழங்கிய அனைத்து உறுதிமொழிகளையும் செயற்படுத்த ஆதரவு வழங்குவோம் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்   

Thu, 12/19/2019 - 08:47


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை