இஸ்ரேல் மீது விசாரணைக்கு சர்வதேச நீதிமன்றம் முடிவு

பலஸ்தீன பகுதியில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்களை விசாரிக்க முடிவு செய்திருப்பதாக சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பாட்டு பெனசூடா தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்கு கரை, கிழக்கு ஜெரூசலம், காசா பகுதியில் நடைபெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள் விசாரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த போர் குற்ற வழக்கை 2015ஆம் ஆண்டு பலஸ்தீனியர்கள் சர்வதேச நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றனர்.

சர்வதேச நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையானது அடிப்படையற்றது என இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் உறுப்பினராக இல்லை. இஸ்ரேல் நாட்டை சட்டபூர்வமற்றதாக்கும் ஓர் அரசியல் தந்திரம் இது என்று தெரிவித்துள்ளார்.

1969ஆம் ஆண்டு நடந்த மத்திய கிழக்கு போரில் மேற்கு கரை, காஸா, கிழக்கி ஜெரூசலம் ஆகிய பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்தது.

“விசாரணையே தேவை இல்லை என்று நம்பும் அளவுக்கு உறுதியான காரணங்கள் ஏதும் இல்லை” என பாட்டு பென்சூடா தெரிவித்துள்ளார்.

விசாரணையை மேற்கொள்வதற்கான நியாயமான காரணங்கள் இருப்பதாக அவர் நம்புகிறார்.

2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நடந்த குற்றங்களைச் சர்வதேச நீதிமன்றம் ஆராய்ந்து வருகிறது. அதாவது ஜூலை மாதம் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன போராளிகள் இடையே நடந்த சண்டையில் 1,462 பொதுமக்கள் உட்பட 2,251 பலஸ்தீனியர்கள் பலியானார்கள். இஸ்ரேல் தரப்பில் 6 பொதுமக்களும், 67 இராணுவத்தினரும் பலியானார்கள்.

சர்வதேச நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையை பலஸ்்தீனம் வரவேற்றுள்ளது. மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெரூசலம் ஆகிய பகுதிகளில் 140 இஸ்ரேல் குடியிருப்புகள் உள்ளன.

இஸ்ரேல் மனித உரிமைக் குழுவான பிடிசெலமுன் இந்த நகர்வை வரவேற்றுள்ளது.

Mon, 12/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை