கெளதமாலாவில் பஸ்–லொறி மோதி 21 பேர் உயிரிழப்பு

கெளதமாலாவில் பயணிகள் பஸ் மற்றும் லொறி நேருக்கு நேர் மோதியதில் 21 பேர் பலியாகியுள்ளனர்.

கெளதமாலா நகரத்தின் கிழக்கே 168 கி.மீ தொலைவில் உள்ள குவாலன் நகருக்கு அருகே பயணிகள் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லொறி மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானது.

தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 21 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 7 சிறுவர்கள் உள்ளனர்.

மேலும், விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

Mon, 12/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை