ஒலிம்பிக் அரங்கு திறப்பு

ஜப்பானில் 2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்காக கட்டப்பட்டுள்ள பிரமாண்ட மைதானத்தை அந்நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே திறந்து வைத்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 24 முதல் ஓகஸ்ட் மாதம் 9ஆம் திகதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதற்காக 68 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டிகளை காணும் வகையில் சுமார் 1.25 பில்லியன் டொலர் செலவில் பிரமாண்ட மைதானம் கட்டப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அபே, கட்டுமானத்தின்போது பல்வேறு பின்னடைவைச் சந்தித்த போதிலும், திட்டமிட்டபடி மைதானம் கட்டப்பட்டிருப்பதாக பாராட்டு தெரிவித்தார். இந்த அரங்கில் ஆரம்ப விழா, நிறைவு விழா உட்பட தடகளப் போட்டிகளும் கால்பந்துப் போட்டிகளும் நடைபெறும்.

Mon, 12/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை