வண்ணமயமாகும் கொட்டகலை சுரங்கப்பாதை

சுவரொட்டிகள் இல்லாத சுத்தமான சூழலை உருவாக்கும் தொனிப்பொருளின் கீழ் இ.தொ.காவின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானின் எண்ணக்கருவுக்கு அமைய மலையக கலாசாரத்தை பிரதிபலிக்கும் ஓவியங்கள் மற்றும் இன, மத கலாசாரங்களை பிரதிபலிக்கும் ஓவியங்கள் கொட்டகலை நகர் மற்றும் சுரங்க பாதை ஹட்டன் டெலிகொம் மதில்சுவர் ஆகியவற்றில் இளைஞர் யுவதிகளால் வரையப்பட்டு வருகின்றன.

இவ் வர்ணம் தீட்டும் பணிகளில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு உணவு ஆகாரங்கள் மற்றும் இதற்கு தேவையான வர்ணங்களை கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர்களான பாலசுப்ரமணியம் மற்றும் நேசன் வழங்கிவருகின்றனர்.

Sat, 12/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை