மட்டக்கள்ப்பு மாவட்டமே அதிக அளவில் பாதிப்பு

மட்டக்கள்ப்பு மாவட்டமே அதிக அளவில் பாதிப்பு-Releif for Flood Affected Batticaloa-GA

மக்களுக்கு துரித நிவாரணம் வழங்க நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் அரசசார்பற்ற நிறுவனங்களுடன்  நேற்று (07) முக்கிய கலந்துரையாடல் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

12 இடைத்தங்கல் முகாம்களில் 64 குடும்பங்களை சேர்ந்த 1,915 பேர் தற்போது தங்கியுள்ளனர். மாவட்டத்தின் 12 பிரதேச செயலகபிரிவுகளை சார்ந்த 15,019 குடும்பங்களின் 51,433 பேர் வெள்ள அனர்த்தத்தில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டமே வெள்ள அனர்த்தத்திற்கு கடுமையான பாதிப்பை எதிர்நோக்கிய மாவட்டமாகும்.

வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் கிரமமான முறையில் நிவாரண பொருட்கள் வழங்குவதற்கு ஏதுவாக திட்டமிடப்பட்டுள்ளது.

வழங்கப்படவிருக்கின்ற உலர் உணவு பொருட்கள் தரமானதாகவும் சிறந்ததாகவும்  இருப்பதை உருதி செய்து கொள்வதும் இடைத்தங்கள் முகாம்களில் தங்கியிருக்கின்ற மக்களுக்கு வழங்கப்பட்டு வருக்கின்ற  சமைத்த உணவு தரமானதாக அமைவதற்கு கிராம சேவக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ,அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள்,  மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் தங்களின் கண்காணிப்புகளையும் அவதானிப்புகளையும் செலுத்தி சிறந்த முறையில் தங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அரசாங்க அதிபர் கேட்டுகொண்டார்.

(புதிய காததான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன்)

Sun, 12/08/2019 - 12:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை