தலிபான் தாக்குதலில் அமெரிக்க வீரர் பலி

வடக்கு ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதலில் அமெரிக்க படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

ஆப்கானில் சேவையில் இருந்த வீரர் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக மாத்திரம் அமெரிக்க இராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வடக்கு குந்துஸ் மாகாணத்தின் சர்தாரா மாவட்டத்தில் அமெரிக்க வாகனம் ஒன்றை இலக்கு வைத்து தமது போராளி ஒருவர் குண்டை வெடிக்கச் செய்ததாக தலிபான் பேச்சாளர் சிஹுல்லாஹ் முஜாஹித் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

மற்றொரு அமெரிக்க வீரர் மற்றும் ஆப்கான் கட்டளைத் தளபதி ஒருவர் காயமடைந்ததாகவும் தலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆப்கான் இராணுவத்திற்கு பயிற்சி, உதவி மற்றும் ஆலாசனை வழங்குவதற்காக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நடவடிக்கையின் கீழ் சுமார் 12,000 அமெரிக்க துருப்புகள் ஆப்கானில் நிலைகொண்டுள்ளன.

கடந்த மாதம் கிழக்கு லோகார் மாகாணத்தில் ஏற்பட்ட ஹெலி விபத்தில் இரு அமெரிக்க படையினர் கொல்லப்பட்டனர்.

Tue, 12/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை