ஜனாதிபதியின் இந்திய விஜயம் இராஜதந்திர வெற்றி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இந்திய பயணம் இராஜதந்திர ரீதியில் பாரிய வெற்றியை நாட்டுக்கு பெற்றுக்கொடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இந்தியாவிற்கான தமது முதலாவது வெளிநாட்டு பயணத்தை நிறைவுசெய்துகொண்டு நேற்றுமுன்தினம் இரவு நாடு திரும்பியிருந்தார். ஜனாதிபதியை வரவேற்பதற்காக நேற்றுமுன்தினம் இரவு அமைச்சர் பிரசன்ன ரணத்துங்க உட்பட அரசாங்கத்தின் பல உயர்மட்ட அதிகாரிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குழுமியிருந்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சாதாரண பயணிகள் செல்லும் வழியின் ஊடாகவே தமது பயணத்தை மேற்கொண்டதுடன், மீண்டும் அதே வழியிலேயே திரும்பிவந்தார். இதன்போது விமான நிலையத்தின் செயற்பாடுகளை அவதானித்ததுடன், புதிதாக பொருத்தப்பட்டுள்ள ஸ்கேன் இயந்திரத்தையும் பார்வையிட்டார். பயணிகளுக்கு சிரமங்களின்றி பயணங்களை மேற்கொள்வதற்கான அனைத்து மறுசீரமைப்புகளும் துரிதமாக முன்னெடுக்கப்படும்.

Mon, 12/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை