வித்தியா கொலை குற்றவாளிகள் மேன்முறையீடு 19இல்

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் பாலியல் வல்லுறவு படுகொலை வழக்கின் குற்றவாளிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை, எதிர்வரும் மே மாதம் 19ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இம் மேன்முறையீட்டு மனு நேற்றைய தினம் உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான மூன்று நீதியரசர்களை கொண்ட குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே நீதிமன்றம் இக் கட்டளையை வழங்கியது.

இக் குற்றச் சம்பவம் தொடர்பாக ரயல் அட்பார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இத் தீர்ப்பை மீளாய்வு செய்து தமக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பையும் மரண தண்டனையையும் இரத்து செய்யுமாறு கூறி மேற்படி ஏழு பேரும் மேன்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sat, 12/07/2019 - 09:31


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை