ஹொன்டுராஸ் சிறையில் புதிய வன்முறை: 16 கைதிகள் பலி

ஹொன்டுராஸ் சிறையில் குற்ற கும்பல்கள் இரண்டுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 16 கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர். மற்றொரு சிறையில் ஏற்பட்ட வன்முறைக்கு இரண்டு நாட்களுக்குப் பின்னரே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தலைநர் டெகுசிகல்பாவுக்கு கிழக்காக எல் பொர்வெனிர் சிறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த மோதலில் துப்பாக்கிகள், கத்திகள் மற்றும் வெட்டுக் கத்திகளும் பயன்படுத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை வடக்கு நகரான டெலாவில் சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில் 18 கைதிகள் கொல்லப்பட்டு 16 பேர் காயமடைந்தனர். ஹொன்டுராஸின் அதிக நெரிசல் கொண்ட சிறைகளில் தொடர்ச்சியாக வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன.

ஹொன்டுராஸ் சிறைகளில் 20,000க்கும் மேற்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோதும் அந்த சிறைகளில் 8,000 பேருக்கு மாத்திரமே இட வசதி உள்ளது.

Tue, 12/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை