விசேட கல்விப் பிரிவு மாணவர்களுக்கான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியின் இரண்டாம் கட்ட போட்டிகள் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதன் போது கல்முனை அல்- மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தைச் சேர்ந்த எம்.என் வலீத் எனும் மாணவன் 30மீ wheel chair ஓட்ட நிகழ்ச்சியில் பங்குபற்றி இரண்டாமிடத்தைப் பெற்று தேசிய மட்டத்தில் சாதனை புரிந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
மேலும் கடந்த மாதம் கொழும்பு மீகொட மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்ற தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியின் முதல்கட்ட போட்டியில் இவ் பாடசாலையைச் சேர்ந்த ஜே.எம்.மாஹிஸ்
எனும் மாணவனும் Collecting Cubes போட்டி நிகழ்ச்சியில் பங்குபற்றி மூன்றாமிடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது
இம் மாணவர்களை நெறிப்படுத்திய பாடசாலையின் விசேட கல்விப் பிரிவு ஆசிரியைகளுக்கும் மேலதிக பயிற்சிகளை வழங்கிய உடற்கல்வி பிரிவினருக்கும் மற்றும் பல்வேறு வழிகாட்டல்களை வழங்கி இம்மாணவர்களை ஊக்குவித்து ஒத்துழைப்பு வழங்கிய மாணவர்களின் பெற்றோர்களுக்கும்
பிரதி அதிபர்கள்,ஆசிரியர்கள் ஆகியோருக்கு பாடசாலையின் அதிபர் எம்.ஐ. எம்.ரசாக் தனது நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
நெய்னாகாடு விசேட நிருபர்
from tkn