சிறந்த சுபீட்சமான அடிமையற்ற நாடொன்றை உருவாக்குவோம்

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி நகர அபிவிருத்திப் பணிகளை சிறந்த முறையில் துணிகரமாக மேற்கொண்ட என்னை எதிர்வரும் 16 ம் திகதி ஜனாதிபதியாகத் தெரிவு செய்யுங்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ நாத்தாண்டியவில் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கான நாத்தாண்டிய பிரதேச பிரசார கூட்டம் நேற்று ( 4 ) நாத்தாண்டிய பஸ் நிலைய அருகில் நடைபெற்றது.

நாத்தாண்டிய பிரதேச சபையின் தவிசாளர் ரொஷான் நிலன்த பெர்ணான்டோ தலைமையில் இப் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

நான் தேசிய பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவேன். மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான கடந்த ஆட்சியில் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது.

பயங்கரவாதத்தை இல்லாமல் செய்தோம். ஆனால் இன்று அவ்வாறில்லை.

தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாகி உள்ளது .

மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கௌரவமான சூழல் நாட்டில் இருந்தது.

நீர்கொழும்பு தினகரன் நிருபர்

Tue, 11/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை