சட்டவிரோத சொத்துக்கள் என்னிடம் கிடையாது

தன்னிடம் இறால் பண்ணைகளோ சட்டவிரோத சொத்துக்களோ கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

தன்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அரசியல் காழ்ப்புணர்ச்சியில் விசமிகள் வதந்திகளைப் பரப்பி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர்,

எனது இறால் பண்ணையைப் பாதுகாப்பதற்காகவே மட்டக்களப்பு வாவி கடல் முகத்துவாரம் வெட்டப்பட்டதா? என்ற தலைப்பில் அரசியல் காழ்ப்புணர்வு கொண்ட விசமிகள் போலிச் செய்தியொன்றினை வெளியிட்டுள்ளனர்.

எந்த ஒரு இடத்திலும் எனக்கு இறால் பண்ணை கிடையாது, ஆகவே, முற்றிலும் அபாண்டமான பொய்களை வெளியிட்ட இணையத்தளம் மற்றும் நபர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கு நான் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன்.

 

பெரியபோரதீவு தினகரன் நிருபர்

Tue, 11/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை