சஜித்தின் பிரசார நிதி விடயத்தில் ஸ்ரீகொத்தாவுக்கு தொடர்பில்லை

சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக நிதி கையாளுகை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகம் தொடர்புபடவில்லை எனவும் அது குறித்து தெளிவுபெறுவதற்கு வொக்‌​ெஷால் வீதியில் அமையப்பெற்றிருந்த செயற்பாட்டு அலுவலகத்திடமே தொடர்புகொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிக் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் நளின்பண்டார தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தொடர்பாக விளக்கமளித்து விடுத்திருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

சஜித் பிரேமதாசவின் தேர்தல் நடவடிக்கைகளின் முக்கிய பொறுப்புகள் கொழும்பு வொக்ேசால் வீதியில் அமையப்பெற்ற செயற்பாட்டு அலுவலகத்தின் மூலமே முன்னெடுக்கப்பட்டன. அந்த செயற்பாட்டு அலுவலகத்தின் பொறுப்பாளராக திஸ்ஸ அத்தநாயக்கவே காணப்பட்டார்.

செயற்பாட்டு அலுவலகத்தின் மூலம் ஸ்ரீகொத்த தலைமையகத்திடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புக்களை சரியான முறையில் நிறைவேற்றிக்கொடுக்கப்பட்டது. அதற்கு மேலதிகமாக கேட்கப்பட்ட அனைத்து ஒத்துழைப்புக்களும் வழங்கப்பட்டன. கட்சி என்ற அடிப்படையில் நாம் எந்தக் குறைபாடுகளையும் வைக்கவில்லை. தேர்தல் பிரசாரப் பணிகக்கான நிதி சேகரிக்கும் பொறுப்புக்கூட வொக்ேசால் வீதி செயற்பாட்டு அலுவலகத்தினூடாகவே மேற்கொள்ளப்பட்டது. எனவே அந்த நிதித் செயற்பாடுகள் தொடர்பில் அங்கிருந்துதான் கேட்டுத் தெளிவுபெற வேண்டும். தேர்தல் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டங்கள் பல தடவைகள் நடத்தப்பட்டன.

தலைமைத்துவ மேல் மட்டத்திலிருந்து கீழ்மட்ட ஊழியர்கள் வரை அடிக்கடி கலந்துரையாடப்பட்டன. ஒரு சந்தர்ப்பத்திலேனும் எந்தவொரு முறைப்பாடும் எவராலும் முன்வைக்கப்படவில்லை என்பதை பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

எம். ஏ. எம். நிலாம்

Thu, 11/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை