சமயத்தொண்டர் சண்முகராஜா காலமானார்

திருகோணமலையின் சமூக சமயத்தொண்டரான இளையதம்பி சண்முகராஜா நேற்றுக்காலை காலமானார்.

தபால் ஊழியராக இருந்த இவர் தனது 88வது வயதில் முத்துக்குமாரசுவாமி ஆலயத்திற்கு அருகிலுள்ள அவரது வீட்டில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1931 ஆம்ஆண்டு பிறந்த இவர், திருகோணமலை தபால் அலுவலகத்தில் ஊழியராக கடமையாற்றியவர்.

அக்காலத்தில் பல சமயஸ்தாபனங்களை நிறுவி மாணவர்களுக்குப் பல்வேறு தொண்டுகளை ஆற்றிய இப்பெரியவர், பல நிறுவனங்களின் பாராட்டுக்களைப் பெற்றவர். தனது உத்தியோகபூர்வ கடமை தவிர்ந்த அனைத்து நேரங்களையும் சமூக, சமய

 

சாய்ந்தமருதைச்சேர்ந்த சீனிமுகம்மது ஜூனைதீன் (வயது36), இஸ்மாலெவ்வை ஹரீஸ் (வயது37), காரைதீவைச்சேர்ந்த சண்முகம் ஸ்ரீகிருஸ்ணன் (வயது47) ஆகிய மூவரே இவ்விதம் கடலில் மாயமாகினர். கடந்த பல நாட்களாக பல கோணங்க ளிலும் தேடுதல் வேட்டைகள் நடைபெற்றும் அவை பலனளிக்கவில்லை.இப்பணிக்கென தரைப்படை, விமானப்படை, கடற்படை உதவியும் பெற்றுக் கொள்ளப்பட்டன.

இந்நிலையில், சர்வதேச கடற்பரப்பில் செயலிழந்த 0222 இலக்கமுடைய இயந்திரப்படகு ஒன்று மீனவர்களுடன் தத்தளிப்பதாகத் தென்பகுதி மீனவர்கள் சிலர் மாத்தறை கடற்படைத் தலைமையகத்திற்குத் தகவல் வழங்கியதன்பேரில் மீனவர்களை மீட்கும் முயற்சியில் கடற்படை ஈடுபட்டுள்ளது.

Wed, 10/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை