கடற்படைக்கு காணி சுவீகரிக்க முயற்சி; மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் தனியார் காணியை கடற்படையினருக்காக சுவீகரிக்க மேற்கொண்ட முயற்சிகள் பொதுமக்களின் எதிர்ப்பையடுத்து கைவிடப்பட்டது.

மாதகல் பொன்னாலை வீதி சுழிபுரம் திருவடி நிலைப் பகுதியில் நேற்று தனியாருக்குச் சொந்தமான 4 ஏக்கர் காணி கடற்படை முகாமுக்கு சுவீகரிப்பதற்காக அளவீடு

செய்யப்படவுள்ளதாக தகவல் கசிந்தது. இதையறிந்த உள்ளூர் மக்கள் காலை 8 மணியளவில் அப்பகுதியில் திரண்டனர்.

வலி.மேற்கு பிரதேச சபை தவிசாளர் நடனேந்திரன், கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்டோரும் அங்கு சென்றிருந்தனர். இந்நிலையில் காணிகளை அளவீடு செய்வதற்காக நில அளவைகள் திணைக்கள அதிகாரிகள் முற்பகல் 9.30 மணியளவில் அங்கு வந்தனர்.அளவீட்டுப் பணிகளை முன்னெடுக்கையில் மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டதால் மக்களிடமிருந்து எழுத்துமூல மனுவைப் பெற்றுக்கொண்டு அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். கடற்படை

 

பருத்தித்துறை விசேட நிருபர்

Tue, 10/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை